கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 2133 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது நேற்று காலை 3655 கன அடியாக அதிகரித்தது.இன்று காலை 3910 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 71.67 அடியாக உயர்ந்து உள்ளது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக வனப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இதுவரை வறண்டு காணப்பட்ட பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.இந்த ஆண்டு பருவ மழை தீவிரம் அடைந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வேண்டியும் அணையில் இருந்து குறித்த நேரத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியும் பொதுப்பணித்துறை சார்பில் மேட்டூர் அணை முனியப்பன் கோவிலில் இன்று காலை தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இதையொட்டி அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை நிர்வாக பொறியாளர் சுப்பிரமணி, உதவி நிர்வாக பொறியாளர் வசந்தன், உதவி பொறியாளர்கள் உமா மகேஸ்வரி, மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சேலத்தில் நேற்று பகல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு சுமார் 8.30 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. சூறாவளி காற்றுக்கு கோரிமேடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்பட சேலத்தின் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.சேலம் கோரிமேடு – ஏற்காடு மெயின் ரோட்டில் ரோட்டோரம் இருந்த புளிய மரம் மின்கம்பிகள் மீது சாய்ந்து விழுந்தது. இதனால் கோரி மேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் கன்னங்குறிச்சி போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.சேலத்தில் நேற்று இரவு பெய்த மழையால் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. பல இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.ஏற்காட்டில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஏற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் நேற்று இரவு மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியது.
Home
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
By Unknown 9:35 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”