ஆசாராம் பாபுக்கு எதிரான சாட்சிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராமின் ஆசரமத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்டு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஆசாராம் சிறையில் உள்ளார். இதுவரை, ஆசாராம் பாபுக்கு எதிரான சாட்சிகள் 9 பேர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அகில்குப்தா கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு பரிந்துரைத்தது.
இதையடுத்து, அகில்குப்தா கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக ஆவணங்களை முஷாபர்நகர் காவல்துறையினர் சிபிஐ அதிகாரிகள் வசம் நேற்று ஒப்படைத்தனர்.
அதன்படி இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Link: http://www.dinamani.com/india/2015/10/24/பாலியல்-புகார்-ஆசாராம்-பாபு-/article3095404.ece













0 thoughts on “பாலியல் புகார்: ஆசாராம் பாபு வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம் ”