மும்பை: வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 439 ரன்கள் என்னும் இமாலய வெற்றி இலக்கை தென்ஆப்ரிக்கா அணி நிர்ணயித்தது. முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அந்த அணியின் மட்டையாளர்களில் மூவர் சதமடித்து அசத்தினர். இறுதியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 438 ரன்களை குவித்தது. டி காக் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டு பிளிஸ்சிஸ் 133 ரன்கள் குவித்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அவரை அடுத்து அதிரடி ஆட்டக்காரர் டி விலியர்ஸ் 61 பந்துகளில் 119 ரன்களை குவித்தார். இறுதியில் தென்னாப்ரிக்கா 438 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 36 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 87(58) ரன்கள் எடுத்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 438 ரன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=174912













0 thoughts on “தொடரை கைப்பற்றியது தென்ஆப்ரிக்கா: கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி”