ஆலந்தூர், செப். 25–
சென்னை, சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துபாய் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 320 பயணிகள் அதில் இருந்தனர்.
ஓடு பாதையில் விமானம் சென்ற போது எந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்ததார். இதையடுத்து விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தப்பட்டது.
என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 5 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு துபாய் விமானம் புறப்பட்டு சென்றது.
Link: http://www.maalaimalar.com/2015/09/25143702/When-I-went-to-the-runways-ele.html













0 thoughts on “ஓடு பாதையில் சென்ற போது துபாய் விமானத்தில் எந்திரக் கோளாறு ”