மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள டெல்லி அரசு, மருத்துவமனைகளை முறைப்படுத்த புதிய சட்டத்தை கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.
டெல்லியில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 1800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளை நெறிப்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வர டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Link: http://www.ns7.tv/ta/node/127514













0 thoughts on “டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: டெல்லி அரசு”