BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

ஆன்லைன் மூலம் தரமில்லாத பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம்: அரசு முதன்மை செயலாளர் அறிவுரை

ஈரோடு செப். 29–

ஈரோடு மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் நுகர்வோர் காவலன் வெள்ளி விழா ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தன் வரவேற்றார்.

விழாவில் தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் உணவு மற்றம் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் சில மாற்றம் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தங்களது ஆலோசனைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.

பொதுமக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வை வாட்ஸ் ஆப் போன்ற தொழில் நுட்பங்கள்மூலம், தெரிவிக்கலாம். சமீப காலமாக இணையதளம் மூலம் பொதுமக்கள் பொருட்களை பதிவு செய்து வாங்குகிறார்கள். இந்த பொருட்கள் பற்றிய தரம் மற்றும் பாதுகாப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதுபோல இணைய தளம் மூலம் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

படித்தவர்கள் கூட செல்போனில் வரும் குறுந்தகவல்களை நம்பி பாங்கியில் உள்ள பணத்தை ஏமாறும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,

இவ்வாறு அவர் பேசினார்.

விழா மலரை முதன்மை செயலர் கோபால கிருஷ்ணன் வெளியிட அதை கலெக்டர் பிரபாகர் பெற்று கொண்டார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷ், மாவட்ட வழங்கல் அதிகாரி ஸ்டெல்லா ராணி, ஈரோடு ஆர்.டி.ஓ நர்மதா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் பால சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Link: http://www.maalaimalar.com/2015/09/29171622/Online-through-do-not-be-decei.html


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “ஆன்லைன் மூலம் தரமில்லாத பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம்: அரசு முதன்மை செயலாளர் அறிவுரை