பெங்களூரு : பெங்களூருவில் நடந்த ஈரான் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.பெங்களூருவில் வரும் 2018 ல் ரஷ்யாவில் நடக்கவுள்ள உலககோப்பைக்கான ‛டி பிரிவு தகுதிச்சுற்று லீக் போட்டி நடந்தது. இதில் உலக தரவரிசைப்பட்டியலில் 40 வது இடத்தில் உள்ள ஈரான் அணியை, தரவரிசைப்பட்டியலில் 155 வது இடத்தில் உள்ள இந்திய அணி எதிர்கொண்டது. இந்தியா, ஈரான் அணிகள் துவக்கம் முதல் இந்திய அணி வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . ஈரான் அணிக்கு போட்டியின் 28 வது நிமிடத்தில் சர்தார் அஜ்மாவுன் முதல் கோல் அடித்தார். இதற்கு இந்திய அணி வீரர்களால் முதல் பாதியில் பதிலடி கொடுக்க முடியவில்லை.இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே எழுச்சிகண்ட ஈரான் அணிக்கு அண்டிரானிக் (46 வது நிமிடம்), மெஹ்தி தாரேமீ (49) ஆகியோர் இரட்டை அடி கொடுக்க, இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். கடைசி வரை போராடிய இந்திய அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. ஆட்டநேர முடிவில் , ஈரான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை பங்கேற்ற 3 லீக் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. அக்., 8ல் அஸ்காபாத்தில் நடக்கவுள்ள 4வது லீக் போட்டியில் இந்திய அணி துர்க்மெனிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1337651













0 thoughts on “உலககோப்பை தகுதிச்சுற்று கால்பந்து : இந்திய அணி தோல்வி”