ஜூலை 1ம் தேதி முதல் எழும்பூர் நீதிமன்றம் மூர் மார்க்கெட் வணிக வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. அல்லிகுளம் வாளாகத்திற்கு மாற்றம் மிகவும் பழைய கட்டடமான சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற கட்டடத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வளாகத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்கள் சென்னை மூர் மார்க்கெட் அல்லிகுளம் வாளாகத்திற்கு ஜூலை 1ம் தேதி முதல் படிப்படியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு இருக்காது அல்லிகுளம் வளாகத்தில் முதல் இரண்டு தளங்கள் ஏற்கனவே வணிக வளாகமாக இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் புதியதாக நீதிமன்றம் வருவதால் தங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்கின்றனர் கடை உரிமையாளர்கள். சீரமைக்கும் பணிகள் 59 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் உள்ள கீழ் நீதிமன்றங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, பழமை வாய்ந்த கட்டிடமான எழும்பூர் நீதிமன்றம் 4 கோடியே 39 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. 10 அல்லது 14 மாதங்களுக்குள் இந்த சீரமைப்பு பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பிரச்சனைகள் இதனிடையே, அல்லிகுளம் வளாகத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படும் நிலையில் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் அகில இந்திய வழக்கறிஞர் நலச் சங்கத்தை சேர்ந்த மணிவண்ணன். Link: http://www.ns7.tv/ta/node/75138 via http://j.mp/tamil_news
Home
ஜூலை 1ம் தேதி முதல் எழும்பூர் நீதிமன்றம் இடம் மாறுகிறது
ஜூலை 1ம் தேதி முதல் எழும்பூர் நீதிமன்றம் இடம் மாறுகிறது
By Unknown 4:24 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஜூலை 1ம் தேதி முதல் எழும்பூர் நீதிமன்றம் இடம் மாறுகிறது ”