ஐஐடி மாணவர்களுக்கு தடை விதித்திருப்பது நவீன தீண்டாமையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யேச்சூரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “சென்னை ஐஐடியில் இயங்கி வந்த மாணவர்களின் அம்பேத்கர் – பெரியார் வாசிப்பு வட்டம் தடை செய்யப்பட்டிருப்பது, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிபிடித்த, சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளின் ஒரு பகுதியேயாகும்.
மேற்படி வாசிப்பு வட்டத்திற்கு எதிராக மொட்டைக் கடிதம் ஒன்றைப் பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டளையின் அடிப்படையில் இந்தத் தடை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மத்திய கண்காணிப்பு ஆணையம் “மொட்டைக் கடிதங்கள், பொய்ப் பெயர்களில் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது,’’ என்று அறிவுரைகள் வழங்கியுள்ள போதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் “அறிவார்ந்த முறையில் நடைபெறும் சிந்தனைகளை’’ மழுங்கடிக்கும் விதத்தில், நாட்டில் பல்வேறு மதத்தினர் வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களுக்கிடையே இருந்து வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை இந்துமதப் புராண, இதிகாசங்களுக்கேற்ப மாற்றியமைக்க முயலும் விதத்தில் மேற் கொள்ளப்படும் இத்தகைய தடைகள் அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கின்ற உரிமைகளின் ஆணிவேரையே பிடுங்கி எறியும் இழிசெயல்களாகும்.













0 thoughts on “ஐஐடி மாணவர்களுக்கு தடை ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிபிடித்த செயல்:சீத்தாராம் யேச்சூரி! ”