சென்னை, ஜூலை.1– தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) மாலை 5.30 மணியளவில் சென்னை எழும்பூர், சிராஜ் மகாலில் நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்குகிறார். முன்னாள் எம்.பி. ஆரூண் முன்னிலை வகிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ. தலைவர் டெக்லான் பாகவி ஆகிய கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநாவுக்கரசு, குஷ்புசுந்தர், யசோதா, செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள். சென்னை, திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Link: http://www.maalaimalar.com/2015/07/01094843/Ramadan-fasting-opening-event.html via http://j.mp/tamil_news
Home
ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: இளங்கோவன் பங்கேற்பு
ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: இளங்கோவன் பங்கேற்பு
By Unknown 10:13 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: இளங்கோவன் பங்கேற்பு ”