வாஷிங்டன்: ஜூன் 30ம் நாள், வழக்கத்தை விட 1 வினாடி அதிகமாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமி, சூரியன், பால்வெளி அண்டம் உள்ளிட்டவற்றை, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராயச்சி மையம், ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள விஞ்ஞானிகள், பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு சுவாரசியமான தகவல்களை தெரிவிப்பார்கள். அந்த வகையில், நாளை மறுதினம் வழக்கத்தை விட 1 வினாடி அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள். அதன் விவரம்: பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதை ஒரு நாள் என்று அழைக்கிறோம். இது வழக்கமாக மொத்தம் 86,400 வினாடிகளை கொண்டது. பூமியின் சுழல் வேகம் குறைவதால், நாளை மறுநாளின் கால அளவு, 1 வினாடி அதிகமாக இருக்கும். வழக்கமாக, சர்வதேச ஒருங்கிணைப்பு நேரத்தில் (யுடிசி) 23:59:59 மணிக்கு பின்னர் 00:00:00 என மறுநாள் தொடங்கி விடும். ஆனால், ஜூன் 30ம் தேதியை பொருத்தவரை, நேரம் 23:59:59 லிருந்து 23:59:60 க்கு மாறும். அதன்பின்னரே 00:00:00 என மறுநாள் தொடங்கும். இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=152999 via http://j.mp/tamil_news
Home
நாசா தகவல் ஜூன் 30ம் நாள் 1 வினாடி அதிகம்
நாசா தகவல் ஜூன் 30ம் நாள் 1 வினாடி அதிகம்
By Unknown 6:04 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “நாசா தகவல் ஜூன் 30ம் நாள் 1 வினாடி அதிகம் ”