தமிழகத்தில், நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான இந்த கலந்தாய்வு ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொது கலந்தாய்வுக்கு தினமும் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் அமர்ந்து கல்லூரி நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மிகப் பெரிய கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்த நீண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஓய்வறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு முதல் உதவி அளிப்பதுடன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியாக தயார் நிலையில் ஆம்புலன்ஸும் வைக்கப்பட்டுள்ளது. புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்புபவர்கள், கலந்தாய்வு அரங்குக்கு அருகில் உள்ள காவல்துறை பூத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வையொட்டி, பல்கலைக் கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Link: http://www.ns7.tv/ta/node/77105 via http://j.mp/tamil_news
Home
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
By Unknown 1:52 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது ”