பெங்களூர், ஜூலை 5- பெங்களூருவில் விதிமுறையை மீறி 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனங்கள் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அவர்களது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் சிபாரிசு செய்துள்ளனர். பெங்களூருவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், லைசென்ஸ் இல்லாமல் சட்ட விரோதமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வருகிறார்கள். அவ்வாறு அவர்கள் ஓட்டி செல்லும்போது விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இதனால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க, அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெங்களூருவில் விதிமுறைகளை மீறி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டியது தொடர்பாக 30–க்கும் மேற்பட்டோரின் பெற்றோர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்வது சட்டப்படி குற்றமாகும். Link: http://www.maalaimalar.com/2015/07/05193925/parents-face-legal-law-if-unde.html via http://j.mp/tamil_news
Home
18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு: ஓட்டுனர் உரிமமும் ரத்து
18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு: ஓட்டுனர் உரிமமும் ரத்து
By Unknown 1:51 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு: ஓட்டுனர் உரிமமும் ரத்து ”