89–வது அகில இந்திய எம்.சி.சி– முருகப்பா தங்க கோப்பைக்கான ஆக்கிப்போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியின் ‘லீக்’ ஆட்டம் நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இருந்து ஐ.ஒ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்), மத்திய கணக்கு தணிக்கை குழு (சி.ஏ.ஜி) ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து ராணுவம் லெவன், பஞ்சாப் சிந்து வங்கி ஆகிய அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறின. நாம்தாரி, கர்நாடகா, மும்பை (‘ஏ’ பிரிவு), ரெயில்வே, ஐ.ஒ.பி, செய்ல் (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. நேற்றைய ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் ஐ.ஒ.சி– பஞ்சாப் சிந்து வங்கி அணிகள் மோதுகின்றன. ஐ.ஒ.சி. ‘லீக்’ ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. ஒரு ‘டிரா’ செய்தது. தோல்வி அடைய வில்லை. பஞ்சாப் சிந்து வங்கிக்கும் இதே நிலை தான். இதனால் ஐ.ஒ.சி இறுதிப்போட்டியில் நுழைய கடுமையாக போராட வேண்டும். மாலை 4 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரை இறுதியில் ராணுவ லெவன்–சி.ஏ.ஜி அணிகள் மோதுகின்றன. Link: http://www.maalaimalar.com/2015/07/25124823/Will-India-qualify-for-the-IOC.html via http://j.mp/tamil_news
Home
games
அகில இந்திய ஆக்கி இறுதிப்போட்டிக்கு ஐ.ஒ.சி தகுதி பெறுமா?: பஞ்சாப் சிந்து வங்கியுடன் இன்று பலப்பரீட்சை
அகில இந்திய ஆக்கி இறுதிப்போட்டிக்கு ஐ.ஒ.சி தகுதி பெறுமா?: பஞ்சாப் சிந்து வங்கியுடன் இன்று பலப்பரீட்சை
TAG
games
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “அகில இந்திய ஆக்கி இறுதிப்போட்டிக்கு ஐ.ஒ.சி தகுதி பெறுமா?: பஞ்சாப் சிந்து வங்கியுடன் இன்று பலப்பரீட்சை ”