திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு நேற்று மாலை தனியார் வேன் புறப்பட்டது. எழிலூர் செல்லியம்மன் கோயில் உண்டியலடி அருகில் வந்தபோது அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த 18 மாணவிகள், 6 மாணவர்கள் என 24 பேர் காயமடைந்தனர். அவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து பிரியதர்ஷினி, தேசிகா, வர்நிஷா, முகந்தன், சசிதரன் உள்ளிட்ட 9 மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் டிரைவர் நாராயணபுரகளப்பாலை சேர்ந்த முருகானந்தம் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். Link: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=78803 via http://j.mp/tamil_news
Home
வாய்க்காலில் பள்ளி வேன் கவிழ்ந்து : 24 மாணவ, மாணவிகள் காயம்
வாய்க்காலில் பள்ளி வேன் கவிழ்ந்து : 24 மாணவ, மாணவிகள் காயம்
By Unknown 3:37 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “வாய்க்காலில் பள்ளி வேன் கவிழ்ந்து : 24 மாணவ, மாணவிகள் காயம்”