BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

அப்துல் கலாம் உடல் இன்று தமிழகம் வருகை: ராமேஸ்வரத்தில் நாளை அடக்கம் *

முழு அரசு மரியாதையுடன் காலை 11 மணிக்கு இறுதிச்சடங்குராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது. முழு அரசு மரியாதையுடன் நாளை காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (84), நேற்று முன்தினம் காலமானார். மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் ஐஐஎம் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்த அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கலாம் மறைவுச் செய்தியறிந்து நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. கலாமின் உடலை சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் மற்றும் ராமேஸ்வரம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் கலாமின் உடலை அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று காலை தமிழகம் வருகை: டெல்லியில் இருந்து கலாம் உடல் இன்று காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறது. மதுரை விமானநிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலுள்ள ‘பருந்து’ விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மதியம் 1 மணிக்கு கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். உச்சிப்புளி விமானத்தளத்திலிருந்து ராணுவ வாகனம் மூலம் ராமேஸ்வரத்துக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.அங்கு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ராமேஸ்வரம் முஸ்லிம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் சகோதரர் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர். இரவு முழுவதும் அவரது வீட்டிலேயே உடல் வைக்கப்படுகிறது. நாளை இறுதி நிகழ்ச்சி: நாளை காலை 11 மணிக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு தொழுகை செய்யப்படுகிறது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேக்கரும்பு கிராமத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பிரதமர் மோடி, கவர்னர் ரோசையா, மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்படும். மண்ணின் மைந்தர் கலாம் உடலை எதிர்பார்த்து ராமேஸ்வரம் தீவு கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளதால் ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் நேற்று ராமநாதபுரத்தில் நடந்தது. கலாமின் வீடு மற்றும் அஞ்சலி செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=158476 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “அப்துல் கலாம் உடல் இன்று தமிழகம் வருகை: ராமேஸ்வரத்தில் நாளை அடக்கம் *