மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று ராமேசுவரம் வந்தார். இறுதிச் சடங்கின் போது அப்துல் கலாம் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அமர்ந்திருந்த அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். அவரது கால்களை தொட்டு வணங்கி வணக்கம் செலுத்திய மோடி; சிறிது நேரம் அப்துல் கலாம் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முகமது முத்து மீரா மரைக்காயர், ‘எனது சகோதரர் அப்துல் கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினந்தோறும் சில நிமிடங்கள் திருக்குர்ஆன் ஓத ஏற்பாடு செய்யவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு மோடி, ‘ஆவன செய்யப்படும்’ என்று உறுதி அளித்தார். அப்துல் கலாமின் அண்ணனின் வேண்டுகோளை, சாஸ்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுராமன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னார். பின்னர் பிரதமர் அளித்த உறுதி மொழியை முகமது மீரா மரைக்காயரிடம் தெரிவித்தார். Link: http://www.maalaimalar.com/2015/07/31105142/Quran-recitation-on-place-of-b.html via http://j.mp/tamil_news
Home
india ,
tamilnadu
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திருக்குர்ஆன் ஓத ஏற்பாடு செய்ய வேண்டும்: மோடியிடம் அப்துல் கலாம் அண்ணன் வேண்டுகோள்
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திருக்குர்ஆன் ஓத ஏற்பாடு செய்ய வேண்டும்: மோடியிடம் அப்துல் கலாம் அண்ணன் வேண்டுகோள்
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திருக்குர்ஆன் ஓத ஏற்பாடு செய்ய வேண்டும்: மோடியிடம் அப்துல் கலாம் அண்ணன் வேண்டுகோள்”