மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் தகராறு செய்த அரசுப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 மாணவர்கள் 6 பேர் 10 நாட்களுக்கு முன் பள்ளிக்கு மது குடித்து விட்டு வந்து வகுப்பறையில் ஆசிரியரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சிவகாமி, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து 6 பேரின் மாற்று சான்றிதழை கொடுத்து பள்ளியில் இருந்து நீக்கினார். அதன் பின் மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அவர் மறுத்துவிட்ட நிலையில் நீக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் பெற்றோருடன் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து முறையிட்டார். அப்போது மாணவரை கண்டித்த ஆட்சியர் அறிவுரை கூறி அனுப்பிவைத்தார். இதனையடுத்து 6 மாணவர்களையும் எச்சரித்து மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள உரிய நடவடிக்கையெடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸிடம் கேட்டபோது, மாணவர்கள் பள்ளியில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், தலைமை ஆசிரியர் 6 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளார். மாணவர்கள் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளேன் என்றார். Link: http://www.dinamani.com/tamilnadu/2015/07/24/மது-அருந்திவிட்டு-பள்ளிக்க/article2937909.ece via http://j.mp/tamil_news
மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த அரசுப்பள்ளி பிளஸ்2 மாணவர்கள் 6 பேர் நீக்கம்
TAG
tamilnadu
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த அரசுப்பள்ளி பிளஸ்2 மாணவர்கள் 6 பேர் நீக்கம் ”