ரோக்ளா(போலந்து), ஆக. 16- போலந்தில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா சுதந்திர தின பரிசாக தங்கம் வென்று அசத்தினார். உலகித் தரநிலையில் 18-ம் இடத்தில் உள்ள அபிஷேக் வர்மா, குழு பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வியடைந்தாலும், தனிநபர் பிரிவில் துல்லியமாக அம்புகளை எய்தார். இறுதிச்சுற்றில் ஈரான் நாட்டின் இஸ்மாயில் இபாதிக்கும் அபிஷேக் வர்மாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஒவ்வொரு ரவுண்ட் முடிவிலும் ஓரிரு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. முடிவில் அபிஷேக் 148-145 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அத்துடன், கடந்த ஆண்டு இஞ்சியானில் நடந்த போட்டியில் இபாதியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டார். இந்தியாவின் ரிகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரி-மங்கள் சிங் சாம்பியா ஜோடி இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் மெக்சிகோ ஜோடியை எதிர்த்து களமிறங்க உள்ளனர். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.
Link: http://www.maalaimalar.com/2015/08/16111522/Abhishek-Verma-earns-India-gol.html













0 thoughts on “வில்வித்தை உலகக்கோப்பை: இந்திய வீரர் அபிஷேக் தங்கம் வென்று சாதனை ”