துபாய்: உலக அளவில் சர்வதேச தரத்தோடு சுற்றுலா பயணிகளை கவரும் பல்வேறு இடங்கள் துபாயில் உள்ளது. சமீபத்தில் துபாய் மம்சார் கடல் பகுதியில் மிதக்கும் சொகுசு ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அழகிய வீடு போன்ற உள்ள உள் கட்டமைப்புடன் பிளாட் ஸ்கிரீன் டிவிகளோடு பெரிய படுக்கை வசதி கொண்ட அறைகள் ,மீன் பிடி பகுதி என பல்வேறு வசதிகள் இந்த மிதக்கும் ஹோட்டலில் உள்ளது.1089 டாலர் வரை ஒரு நாள் கட்டணமாக உள்ளது. டோபாஸ் என்று பெரிய அறைகளுடனும்,ஜொமுரடா என்ற சிறிய அளவிலான அறைகளும் கொண்ட இருவகையான வசதிகளும் உள்ளது கடல் நடுவே தங்கி ரசிக்கும் ஆர்வமுடைய சுற்றுலா பயணிகள் அதிகம் இங்கு வருகின்றனர். ஜவ்ஹரா ஹோட்டல் குழுமத்தினரால நடத்தப்படும் இந்த ஹோட்டலில் திருமணமான ஜோடிகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவதோடு மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=163650













0 thoughts on “துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் மிதக்கும் சொகுசு ஹோட்டல்”