கொழும்பு, ஆக. 29- கொழும்பில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், தொடக்க வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெற்ற புஜாரா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அத்துடன் இந்தியாவின் ஸ்கோரை 292 ரன்னாக உயர்த்த முக்கிய காரணமாக இருந்தார். இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 135 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் உள்ளார். தனது சிறப்பான இந்த சதம் குறித்து அவர் கூறுகையில், ‘‘நான் இந்தியா ஏ அணியில் விளையாடிக்கொண்டிருக்கும்போது டிராவிட்டிடம் இருந்து ஒரு சிறந்த விஷயம் வெளியானது. என்னுடைய ஆட்டத்திறனில் எந்தவித தவறும் இல்லை என்று கூறிய அவர், என்னை அமைதியாக காத்திருக்கும்படி கூறினார். மேலும், என்னுடைய வலைப் பயிற்சியை பார்வையிட்ட அவர், விரைவில் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தப்போவதாக கூறினார். அது இலங்கையில் அல்லது இந்தியா ‘ஏ’ போட்டியில்கூட இருக்கலாம் என்றும் கூறினார். அவரது இந்த வார்த்தை, என் திறமை மீது எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது” என்றார்.
Link: http://www.maalaimalar.com/2015/08/29213244/Dravid-said-theres-nothing-wro.html













0 thoughts on “பெரிய இன்னிங்ஸ் விளையாடுவேன் என்று டிராவிட் நம்பிக்கை கொடுத்தார்: புஜாரா சொல்கிறார்”