கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் பெண் பயணி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட உபேர் நிறுவன வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆங்கில
நாளிதழ் ஒன்றில் செய்தியாளர் பணியில் உள்ள பெண் ஒருவர் நேற்றிரவு கர்நாக்
தெருவில் இருந்து கொல்கத்தா நகரின் தெற்கே சர்வே பூங்கா பகுதியில் உள்ள
தனது வீட்டிற்கு செல்ல உபேர் நிறுவனத்தின் வேன் ஒன்றில் சென்றுள்ளார்.
அதனை
தொடர்ந்து இந்த தகாத சம்பவம் நடந்துள்ளது. வேனின் ஓட்டுநர் முகமது
குர்பான் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இது குறித்து
மூத்த போலீசார் ஒருவர் கூறும்போது, புகாரின்படி உடலில் தொடவோ அல்லது
பாலியல் துன்புறுத்தலோ செய்யவில்லை.
அந்த ஓட்டுநர் தகாத வார்த்தைகளை
அந்த பெண் பயணியிடம் கூறி வன்முறையில் ஈடுபட்டுள்ளார் என அவர்
கூறியுள்ளார். பெண் அளித்துள்ள புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள
ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அதன்பின் ஐ.பி.சி.யின் 504, 506, 509 ஆகிய
பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்
கூறியுள்ளார்.
Link: www.DailyThanthi.com/News/India/2015/08/26133728/Uber-driver-arrested-for-misbehaving-with-woman-passenger.vpf













0 thoughts on “பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட உபேர் வேன் டிரைவர் கைது”