துபாய்: இயற்கை ஆர்வலர்களுக்கு தீனியாக விளங்குவது தீவுகளாகும். உலகில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவுகளில் பாம் ஜீமைரா மிகபெரிய தீவாக துபாயில் அமைந்துள்ளது .சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு செயற்கை தீவு திட்டமான துபாயில் தி வோல்ட் தீவுகள் திட்டத்தில் ஒரு பகுதியான 'ஹார்ட் ஆப் யுரோப்' என்ற செயற்கை தீவை உருவாக்கும் திட்டத்தை க்லேஇண்டீனிஸ்ட் செயல்படுத்தி வருகிறது. இதில் குளிர் பிரேதசங்களை அதிகமாக கொண்ட ஆஸ்டிரியா, மொனாக்கோ, ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்விசர்லாந்து மற்றும் செண்ட்.பீடர்ஸ்பர்க் பகுதிகளைப் போன்ற 6 செயற்கை உருவாக்கப்பட்டு வருகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கை தீவான பாம் ஜீமைராவுக்கு அடுத்ததாக உருவாகும். இந்த செயற்கை தீவில் அந்தந்த நாடுகளில் நிலவும் தட்பவெட்ப சூழ்நிலைகள் செயற்கையாகவும், அங்குள்ள தெருக்கள் போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக சுவீடன் பகுதிகளுக்ககான குடியிருப்புகள் அடுத்த ஆண்டு நிறைவு பெற உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. வருடத்தின் முதல் கால் பகுதியில் ஒரு வில்லாவும் வருடத்தின் இறுதியில் மீதியும் நிறைவடைய உள்ளதாக இத்திட்டத்தின் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=162741













0 thoughts on “துபாயில் உருவாகி வரும் செயற்கை தீவில் அடுத்த ஆண்டு நிறைவு”