சிவசேனா ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் ஆரத்தியுடன் தாஜ்மகாலுக்குள் நுழைய முயன்றனர். புனித சிரவண மாதத்தின் முதல் திங்கட்கிழமை என்பதால் அவர்கள் அங்கு ஆரத்தி எடுக்க திட்டமிட்டதாக தெரிகிறது. ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை லத்தியால் விரட்டியடித்தனர்.உத்தரபிரதேச மாநில சிவசேனா தலைவர் அனில்சிங், தங்கள் கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாஜ்மகாலில் ஆரத்தி எடுக்கும் திட்டமும் எங்களிடம் இல்லை என்றார். தாஜ்மகால் உண்மையிலேயே சிவன் கோவில் என்று சில வக்கீல்கள் கோர்ட்டில் தொடர்ந்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Link: www.DailyThanthi.com/News/India/2015/08/05013125/Taj-MahalWho-tried-to-take-Arati-virattiyatippu.vpf
via http://j.mp/tamil_news













0 thoughts on “தாஜ்மகாலில் ஆரத்தி எடுக்க முயன்றவர்கள் விரட்டியடிப்பு பாதுகாப்பு போலீசார் நடவடிக்கை ”